Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சின்ன தகராறு உருட்டுக்கட்டையால் அடித்து கொலை…உடலை கோவில் குளத்தில் வீசிய கொடூரம்

Priyanka Hochumin Updated:
சின்ன தகராறு உருட்டுக்கட்டையால் அடித்து கொலை…உடலை கோவில் குளத்தில் வீசிய கொடூரம்Representative Image.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே செல்லியம்மன் கோயில் குளத்தில் மிதந்த உடல். இந்த சம்பவத்தின் குற்றமும் பின்னணியும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சின்ன தகராறு உருட்டுக்கட்டையால் அடித்து கொலை…உடலை கோவில் குளத்தில் வீசிய கொடூரம்Representative Image

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர், சோழவரம் அடுத்த நல்லூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே பிரவீன் குமாரின் தந்தை போன் செய்தும் அவர் போன் எடுக்காததால் கவலையடைந்த தந்தை சக்திவேல் மகனை காணவில்லை என சோழவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

சின்ன தகராறு உருட்டுக்கட்டையால் அடித்து கொலை…உடலை கோவில் குளத்தில் வீசிய கொடூரம்Representative Image

பின்னர் செல்லியம்மன் கோயில் குளத்தில், பிரவீன் குமாரின் உடல் மிதக்கும் நிலையில் கண்டறிந்தனர். பிரவீன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்பு அவர் கொலை செய்யப்பட்டு கோவில் குளத்தில் வீசப்பட்டது நிரூபணமானது. அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, நல்லூர் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையில் பிரவீன்குமார் உணவருந்தி விட்டு  சென்றபோது தகராறு ஏற்பட்டதாகவும், கடை உரிமையாளரான நரேஷ், உருட்டு கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கியதில், பிரவீன் குமார் உயிரிழந்ததாகவும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்