அதிமுகவின் வரவு செலவு கணக்கை மேற்கொள்ள கூடாது என வங்கிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காரணமாக , ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றைய தினம், அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் காரணமாக வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். மேலும் அதிமுகவில் இருந்து ஒ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாகவும், அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டத்தின் படி இன்று வரை நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் போது என்னை கேட்காமல் எந்தவித வரவு செலவு கணக்கையும் மேற்கொள்ள கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…