திருவேற்காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு சோழபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி லதா (40). இவர்களுக்கு பிரசன்னா (17), மதுமிதா (15), என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ், 2வதாக பிரியதர்சினி என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் பிரியதர்ஷினி அறைக்கு சென்ற ரமேஷ் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் பதட்டமடைந்த பிரியதர்ஷினி அருகில் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக நடத்தப்பட முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்ப்பட்ட நஷ்டம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்ததாஜ கூறப்படுகிறது. இருப்பினும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…