17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைன் மூலமாக முன்கூட்டியே பதிவு செய்தால், அவர்களின் 18வது பிறந்த தினத்தில், பிறந்த நாள் பரிசாக வாக்காளர் அட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரிப்பன் பில்டிங்கில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.
இதில் இந்தியத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் மாநில தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…