காவிரி மேலாண்மை ஆனையத்தின் கூட்டம் 3 வது முறையாக ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 17ம், தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு மனு தாக்கல் செய்ததால், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு ஜூன் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், நாளை நடைபெறுவதாக இருந்த கூட்டம் மீண்டும் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் டெல்லியில், இம்மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்திலோ இக்கூட்டம் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…