அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடி வந்ததை தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி பகுதியை சேர்ந்த காளிமுத்து - வாசுகி தம்பதியினருக்கு 2 ஆண், 2 பெண் என மொத்த 4 பிள்ளைகள் இருந்து வந்துள்ளது. காளிமுத்து இறந்து 10 வருடங்கள் ஆன நிலையில் வாசுகி கூலி வேலைக்கு சென்ற பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய இளைய மகள் அதேபகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அதிக நேரம் செல்போனிலே கேம் விளையாடிக்கொண்டிருந்த்தால் தாய் கண்டித்துள்ளார்.
இதனையடுத்து வாசுகி வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்ற நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, மாணவி விஷத்தை சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவியை பரிசோதித்த மருந்த்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட அவரது தாய் கதறி அழுதுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…