சென்னை, கலைவாணர் அரங்கில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் போதைப்பொருள்களை ஒழிப்பது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இக் கூட்டத்தின் இறுதியில் போதைப் பொருட்களுக்கான தடை உள்ளிட்டவை குறித்த முக்கிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…