ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கோட்டா மச்சிடா, யுயா சகாய் இணைந்து உணவுக்கழிவுகளை கொண்டு கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமென்ட்டை தயாரித்திருக்கிறார்கள். இவை வழக்கமாக பயன்படுத்தப்படும் கான்க்ரீட்டை விட 4 மடங்கு அதிகம் என கூறுகிறார்கள். தேயிலை இலைகள், ஆரஞ்சு, வெங்காயத் தோல்கள், காபி கொட்டைகள், முட்டைக்கோஸ் பயன்படுத்தி தயாரித்ததாக தெரிவித்துள்ளனர்.
அழுகி வீணாகும் நிலையில் உள்ள பொருட்களை கொண்டு இந்த சிமெண்ட தயாரிக்கப்படுவதாகவும், இதன் மூலம் உணவுக்கழிவுகள் அழுகி மீத்தேன் போன்ற வாயுக்களாக மாறி புவி வெப்பமயமாவதாகவும், இந்த கண்டுபிடிப்பின் மூலம் வெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படும் என நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் கார்பன் டை ஆக்சை வெளியேற்றத்தில் 8 சதவீதம் சிமெண்ட் உற்பத்தியால் ஆவதாக இங்கிலாந்து ஆராய்சியாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…