மாமியரை மருமகன் பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு, திருவள்ளூர் பகுதியை சேர்ந்த மதன்குமார் என்ற மதன், தனது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மதனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது. தகராறு காரணமாக அவரது மனைவி அவரது அம்மா வீட்டுக்கு கோபித்துக்கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து அவரது அம்மா தட்டிக்கேட்க மதன் வீட்டிற்கு சென்றுள்ளாஅர், இதனால் ஆத்திரமடைந்த மதன் மதுபாட்டிலை வைத்து மாமியாரை சரமாரியாக குத்தியுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மதன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மதன்குமார் மீது காசிமேடு, ராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதும், மதன்குமார் ஏற்கனவே காசிமேடு காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…