சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே மின்கம்பத்தில் ஆம்னிவேன் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியிலிருந்து ஆம்னிவேன் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, காரைக்குடி அருகே ஆவுடை பொய்கை கிராமத்தில் மின்கம்பம் ஒன்றில் மோதியது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இறந்தவர்கள் மணிகண்டன், ஜெயபால், அரவிந்த் என தெரியவந்துள்ளது. மேலும் ஆம்னியில் பயணத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…