வரத்து அதிகரிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் தக்களி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இருந்த போதிலும் வரும் காலங்களில் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கேயம்பேடு சந்தைக்கு நேற்று 56 லாரிகளில் இருந்து தக்காளி கொண்டு வரப்பட்டதால் விலை சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, முதல் ரக தக்காளி பெட்டி ஒன்று 120க்கும் விற்கப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் விலை ரூபாய் 30 அதிகரித்து பெட்ட்ரி ஒன்று 150க்கு விற்பனையாவதாக கூறப்பட்டுள்ளது. மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை சற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…