வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து வீடுகளில் உள்ள மின்சார மீட்டர்களுக்கு மின்வாரியம் வாடகை வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக மின்சார வாரியம் கடுமையான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த சில நாடகளுக்கு முன்னர் மின்சார கட்டணத்தை உயர்த்து உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது மின்வாரியம் புதிய முடிவு ஒன்றை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, தற்போது வீடுகளுக்கு பொறுத்தப்படும் மின்சார மீட்டர்கள் டெபாசிட் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கும் மாத வாடகையாக ரூபாய் 60 வீதம் வாடகை கட்டணம் வசூலிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு கனிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கபடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாடகை கட்டணம் வசூப்பது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுற்ஐ ஆணையத்திற்கு மின்சார வாரியம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்கி அனுமதி கிடைத்தால் வரும் செபடம்பர் மாதத்தில் இருந்து மீட்டருக்கு 2 மாதத்திற்கு ரூபாய் 120 என வாடகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…