நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பஞ்சு விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், நூல் விலையும் உயர்ந்துள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நூல் உயர்வை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், “நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்” தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…