நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வரும் 20-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகாமை உத்தரவிட்டுள்ளது.
இளங்கலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ராணுவக்கல்லூரியின் வேண்டுகோளை ஏற்று, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
விரிவாகப் படிக்க: மீண்டும் தள்ளிப் போகும் நீட் தேர்வுக்கான பதிவு…! எந்த தேதி தெரியுமா..?
அதன்படி, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 20-ம் தேதி இரவு 9:50 மணிக்குள்ளாக, https://neet.nta.nic.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…