வாகன சோதனையில் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 525 சிறார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் சிறப்பு வாகன தணிக்கையை போக்குவரத்து காவலர்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 14ம் தேதி சென்னையில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் சிறுவர்கள் வாகனம் ஓட்டியது தொடர்பாக 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…