சீன உளவுக் கப்பல் 'யுவான் வாங் 5' இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் சென்றடைந்தது.
இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. சீன உளவுக் கப்பலால் தென் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைதொடர்ந்து இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் உஷார் படுத்தப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய போர்க்கப்பல் ஒன்று இலங்கை கடல் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவை பெரும்பாலும் சிக்னல்களை இடைமறிக்கும் மின்னியல் போர் கப்பலாக இருக்கலாம் என ராணுவ வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…