Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கை வரும் சீன உளவுக்கப்பல் :- ரேடாரை சோதிக்கும் இந்தியா...!

Bala August 10, 2022 & 17:15 [IST]
இலங்கை வரும் சீன உளவுக்கப்பல் :- ரேடாரை சோதிக்கும் இந்தியா...!Representative Image.

இந்தியாவின் எதிர்ப்பை மீறி நாளை இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தின் சீனாவின் சக்தி வாய்ந்த அதிநவீன உளவு கப்பல் வரவுள்ளதால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ளகலங்கரை விளக்கத்தில் ரேடாரை பழுது நீக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சீனாவின் சக்தி வாய்ந்த யுவான் வாங் -5' என்ற அந்த உளவுக்கப்பலின் மூலம் 750 கிலோமீட்டர் தூரம் வரை தென்னிந்திய மாநிலங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும் எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து கடலோர பகுதிகளில் கப்பல்கள், படகுகளின் நடமாட்டத்தை துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் மெரினா கலங்கரை விளக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ரேடார் 10 நாட்களுக்கு முன் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதனை பழுது நீக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி  ராட்சத கிரேன் மூலம் ரேடார் கீழே இறக்கப்பட்டு பழுது நீக்கம் செய்யப்பட்டுவருகிறது.

ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டம், சீன உளவுக்கப்பல் வருகை போன்ற காரணங்களால், இந்திய பெருங்கடலில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறி வருகின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்