தனியார் ஹோட்டல் மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிக்கூண்டு அருகே தனியார் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு உணவகக்த்திற்கு சென்றுள்ளார். அப்போது பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்த போது, அதில் திடீரென கரப்பான் பூச்சி கிடந்ததை கண்ண்டு அவர்கள் அதிர்சியடைந்தனர். இதனயடுத்து கடை உரிமையாளரிடம் மூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் இதே பகுதியில், தந்தூரி சிக்கன் சாப்பிட்டு 10 வயது சிறுமி லோஷினி உடல் உபாதைகள் பிரச்சனை காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…