கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் 'கான்க்ளேவ் 2022' நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று மலையாளத்தில் உரையாற்றி வருகிறார்.
அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; கொரோனா தொற்று காரணமாக கான்க்ளேவ் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா மேலும் வலிமையோடு இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பதே, நாட்டை காப்பதாக அர்த்தம், தமிழ், மலையாளம் மொழிகளுக்கு இடையே ஆழமான உறவு இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும், மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே, நாடு வளர்ச்சி அடையும் என்றும், மாநில அரசுகள் வலுவாக இருப்பது, மத்திய அரசுக்கு பலம்தானே தவிர பலவீனமல்ல என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பேச்சுரிமை மறுக்கப்படுகிறது; இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலை பேசியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…