போர் வந்தால் அக்னிபாத் திட்டத்தின் உண்மை தெரிந்து விடும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உத்திரபிரதேசம், பீகார், தெலங்கான ஆகிய மாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீ வைத்தால் பெரும் பதற்றம் ஏற்ப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்து மாத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக வேலைவாய்ப்பு மாறியுள்ளதாக எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், அக்னிபாத் திட்டத்தால் கடைசி வாய்ப்பாக ராணுவ வேலைவாய்ப்பும் மூடப்பட்டுள்ளதாகவும், இது ராணுவத்தை பலவீனமாக்கும் செயல் என்றும், போர் வந்தால் அதன் பாதிப்பு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தை பிரதமர் மோடி திரும்பப் பெறுவதுதான் உண்மையான நாட்டுப்பற்று என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…