கடந்த சில நாட்களாக புல்டோசர் தொடர்பாக செய்திகள் அதிகம் வந்து கொண்டிருந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் ஒரு மணமகன் தனது திருமண ஊர்வலத்திற்கு குதிரை, காருக்கு பதிலாக புல்டோசரில் ஊர்வலமாக வந்தது வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டத்தின் பைன்ஸ்தேஹி தாலுகாவிற்குட்பட்ட ஜல்லார் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருமண ஊர்வலத்தின் போது மணமகன் அங்குஷ் ஜெய்ஸ்வாலுடன் இரண்டு பெண் குடும்ப உறுப்பினர்களும் புல்டோசரில் ஊர்வலமாக சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. சிவில் இன்ஜினியரான ஜெய்ஸ்வால், தனது வேலையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் புல்டோசர் உள்ளிட்ட கட்டுமானம் தொடர்பான இயந்திரங்களுடன் வேலை செய்து வருவதாகவும், எனவே, எனது திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றுவதற்கு இதுபோன்று செய்ததாக தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…