Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மின்சாரம் தாக்கி பலியான பசு :-பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

Bala August 23, 2022 & 09:14 [IST]
மின்சாரம் தாக்கி  பலியான பசு :-பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்புRepresentative Image.


ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு பலியானதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட புதுக்குடி கிராமத்தில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்திற்காக புதிய மின்மாற்றி அமைத்து அதிலிருந்து மின்சாரம் எடுக்கப்படுகிறது. இந்நிலையில்  இயந்திரங்களின் சோதனை ஓட்டத்திற்காக மின்சாரம் தற்காலிகமாக  எடுத்து பயன்படுத்திய போது அவ்வழியாக வந்த அதே பகுதி எதிர்வீட்டில் வசித்து வரும் ஞானசேகரன் என்பவரது பசுமாடு  மின்வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து  சம்பவ இடத்திலேயே பலியானது. 

இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகர் உள்ளிட்ட பகுதி மக்கள்
மின் வயரை அலட்சியமாக போட்ட அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேலும் இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தேவையில்லை என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்