தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடித்ததன் பிரச்சனையாக இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், மும்பையில் சிவாஜி நகரைச் சேர்ந்த சுனில் சங்கர் என்ற 21 வயது இளைஞர் ஒருவர் நேற்று 3 சிறுவர்கள் கண்ணாடி பாட்டிலில் வெடி வெடிப்பதைத் தடுத்துள்ளார்.
இதில், அவர்களுக்கு இடையே அற்பட்ட வாக்குவாதம் காரணமாக சிறுவர்களில் ஒருவன் தான் வைத்திருந்த கத்தியை வைத்து அந்த இளைஞரை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த இவர் மருத்துவமனிக்குக் கொண்டு செல்லும் வழியில் அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இதில், 2 சிறுவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிறுவர் தப்பி விட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…