Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்தடுத்து சோகம்:- கடலூரில் பள்ளி மாணவி தற்கொலை..!

Bala July 26, 2022 & 15:23 [IST]
அடுத்தடுத்து சோகம்:- கடலூரில் பள்ளி மாணவி தற்கொலை..!Representative Image.

கடலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்கிடு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசுக்கு தெரிவிக்காமல் இறூதி சடங்கு செய்ய முற்ப்பட்ட போது, தகவலறிந்து வந்த போலீசார் மாணவியிடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரியாக படிக்க முடியவில்லை என மாணவி மன உளைச்சலில் இருந்ததாவும், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் கூறியதாக தெரிய வந்துள்ளது. மேலும் வீட்டில் மாணவி எழுதி வைத்த மூன்று பக்க கடிதத்தையும் கைப்பற்றிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவியும், அதற்கு முன்னதாக கள்ளக்குறிச்சியில் ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்