கடலூர் திமுக எம்.எல்.ஏ அய்யப்பன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், வருத்தம் தெரிவித்து அய்யப்பன் வைத்த கோரிக்கையை ஏற்று ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். கடலூர் திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் பாஜகவுக்கு தாவ உள்ளதாக தகவல் பரவிய நிலையில் வாபஸ் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…