ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது எனக்கூறிய கணவனை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் ஜோர்பிதா கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து இளம்பெண்ணான புஷ்பா தனது கணவருடன் ஜோர்பிதா கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது புஷ்பா ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என அவரது கணவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் ஊர் திருவிழாவையடுத்து புஷ்பா ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்துள்ளார். இதனை அறிந்து அவரது கணவர், ஏன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்றாய் எனக் கோபத்துடன் கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற புஷ்பா, கணவனைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவன் சம்பவ இடத்திலேயே பலியானர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…