ஆந்திரா கோதாவரியில் தாடே பள்ளிகுடம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி குவைத்தில் உள்ள வீட்டில் வேலை பார்த்து வருகிறார். தான் சம்பாதித்த பணத்தை தனது கணவருக்கு அனுப்பி வந்துள்ளார். இந்த நிலையில், கணவர் அவர் அனுப்பும் பணத்தை மது வாங்க பயன்படுத்துவதை அறிந்த அவர் பணம் அனுப்புவதை நிறுத்தியுள்ளார்.
மனைவி செலவுக்கு பணம் அனுப்புவதில்லை என்ற கோபத்தில் தனது இரண்டு பெண் குழந்தைகளை துன்புறுத்தி வந்துள்ளார்.
குடிபோதையில் தாம் பெற்ற குழந்தைகள் என்று கூட பார்க்காமல் இரண்டு பெண் குழந்தைகளையும் தாறுமாறாக தாக்கும் வீடியோ வெளியாகி தற்போது வைரலான நிலையில் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…