தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த
வெற்றியை எதிர்த்து, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 2021ல், பதவிக் காலம் முடிந்ததால் காலவதியாகிவிட்டதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அனிதா ராதகிருஷ்ணன் மனு தாக்க்ல் செய்திருந்தார். இந்நிலையில், பதவிக்காலம் முடிந்து விட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த முகாந்திரமும் இல்லை என வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…