மின்சார ஸ்கூட்டர் சாலையில் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த அருள்ஜோதி என்பவர், திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் அருகே அய்யலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பைகில் இருந்து புகையுடன் நெருப்பு சேர்ந்து வருவதை கண்ட அவர், பயத்தில் வாகனத்தை நிறுத்தி ஓடிவிட்டார். சிறுதுநேரத்தில் வாகனம், முழுவதும் தீப்பற்றி சாம்பலானது.
தீ பிடிப்பதை முன்கூட்டியே சுதாரித்துக்கொண்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…