மின் கட்டண உயர்வுக்கு எதிராக அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டண உயர்வு, விலை வாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற பிரச்சனைகளை எதிர்த்து அதிமுக வருகின்ற 25 ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் 25 ஆம் தேதி காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் முடக்கி விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…