தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துதுறை ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொழிற்சங்ககள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீசை தொழிற்சங்க அமைப்பான சிஐடியூ விடுத்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 3ம் தேதியோ அல்லது அதற்கு பின்னரோ போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…