வெள்ளத்தில் சிக்கிய யானை உயிர் பிழைக்க போராடும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை உலுக்கி வருகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நாளை 10 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கனமழை காரணமாக கேரளாவில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ல்,
இந்நிலையில், 'பிள்ளப்பற' என்னும் இடத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியது. வெள்ளம் அதிகரிக்கவே, யானை உயிர்பிழைக்கப் போராடியது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி நெஞ்சை உலுக்கியுள்ளது. தகவலறிந்த வனத்துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…