Uyirin Uyire Singer: அப்படிபோடு, உயிரின் உயிரே உள்ளிட்ட பாடல்களை பாடி அசத்திய இசைக் கலைஞர் நேற்று திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்தியத் திரையுலகின் பிரபல பாடகரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், நேற்றிரவு (மே 31) கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். இவருக்கு வயது 53. இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் பாடியுள்ளார். ’மின்சார கனவு’ படத்தில் ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே...’ பாடல் மூலம் தமிழில் அறிமுகமானவர் இவர்.
இதனையடுத்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன்படி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்க செய்தியில், அனைத்து வயதினரையும் கவர்ந்த பாடல்கள் மூலம், அவர் நம்முடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். மேலும் அவரை இழந்தை வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…