ஆவின் பொருட்கள் மற்றும் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களின் மீதான பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை நீக்குமாறு மத்திய, மாநில அரசுகளை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்," அண்மையில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குழுக் கூட்டத்தில், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு ஐந்து விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டுள்ளது. நெய் மீது 12 விழுக்காடு வரி விதிக்கவும் முடிவு எடுக்கப்பட்டதன் அடிப்படையில் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது." என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…