ம.பி.யின் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பனி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தீ விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…