ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால், 31 நாட்களாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கர்நாடவில் கனமழை வெளுத்து வனக்கி வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய அணைகள் நிரம்பிய நிலையில், அனையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும், ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.60 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை இறங்கவோ வேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும் 31 நாட்களாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…