அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது இதனையடுத்து மேட்டூர் அணையிலிருந்து கல்லணை, முக்கொம்பு அணையில் இருந்து வினாடிக்கு 2.15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு கொள்ளிடம் வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் அணைக்கரை கீழணை வந்தது. இதனையடுத்து அணைகுடி கிராமத்தின் தெரு மற்றும், பள்ளியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இருந்த போதிலும் இன்று மாணவர்கள் யாரும் பள்ளிக்கு செல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. .
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…