நீட் தேர்வின் போது மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமின் சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் ஒன்றில், மாணவிகளின் உள்ளாடையில் உலோக ஹூக் இருப்பதால் அனுமதிக்க முடியாது என மாணவிகள் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஒருவர், பல மாதங்கள் கடுமையாக படித்தும் இதுபோல மன ரீதியான தொல்லையால் என் மகள் சரியாக தேர்வெழுதவில்லை; அழுதுகொண்டே வெளியே வந்தாள் என போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய நிலையில்,பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்த வந்தனர்.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, தேசிய தேர்வு முகமின் சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…