கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நன்னிலம் டு குடவாசல் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து குடவாசலில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நன்னிலம் நோக்கி சென்றுக்கொண்டு இருந்தது. அப்போது நன்னிலம் அருகே உள்ள சலிப்பேர் என்ற இடத்தில் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி கடும் விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர், நடத்துநர்ம் பேருந்தில் பயணித்தவர்கள் என மொத்தம் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…