பேருந்து பயணிகளிடம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாக சமீப காலமாக அதிகளவில் புகார்கள் எழுந்துவருகின்றன. மாநிலம் வித்தியாசம் இல்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்த சூழலில், கர்நாடக மாநிலம் தென்கன்னட மாவட்டத்தில் சுள்யா புத்தூர் ஈஸ்வரங்களாவில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து நடத்துனர் பயணி ஒருவரின் மார்பில் எட்டி உதைத்து சாலையில் தள்ளிய மனிதாபிமானமற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஈஸ்வரமங்களம் பகுதியில் நேற்று ஒரு அரசு பேருந்து அங்குள்ள நிறுத்தத்தில் நின்றது. அப்போது ஒரு பயணி பேருந்தில் ஏறினார். ஆனால், அவர் மது அருந்தி இருப்பதாக கூறப்பட்டது. இதனை அறிந்த நடத்துனர், அந்த பயணியை பேருந்தில் இருந்து இறக்குமாறு பலமுறை தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால், அவர் இறங்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த நடத்துனர் அந்த பயணியை சரமாரியாக கன்னத்தில் அறைந்து, படிக்கட்டில் நின்று கொண்டிருந்து அவரை காலால் மார்பில் எட்டி உதைத்துள்ளார். இதனால், நிலை தடுமாறி அந்த பயணி கீழே விழுந்துள்ளார். அதைப் பற்றி கவலையில்லாமல் நடத்துனர் விசில் அடுத்து பஸ்ஸை போகச் செய்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த பயணியை எழுப்பி சாலையோரம் அமர வைத்தனர்.
கீழே விழுந்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அங்கிருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நடத்துனர் அந்த பயணியை அடித்து உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், பலரும் அந்த அரசு பேருந்து நடத்துனரை கண்டித்து வருகின்றன.
இச்சம்பவம் பெரிதாக, சம்பந்தட்ட அரசு பேருந்து நடத்துனரை கர்நாடகா மாநில போக்குவரத்து கழகம் இடைநீக்கம் செய்து உத்திரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…