பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், அவரது மனைவியும் நடிகையுமான அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா உட்பட பலர் நடித்துள்ள "பிரம்மாஸ்திரா" என்ற படம் நாளை வெளியாகயுள்ளது. இதையொட்டி, திரைப்பட இயக்குநர் அயன் முகர்ஜிவ், ரன்பீர் கபூர், ஆலியா ஆகியோர் மத்திய பிரசேதச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலில் உள்ள உலக புகழ்பெற்ற ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க நேற்று மாலை சென்றனர்.
அப்போது விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலர் உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயில் வளாகத்தில் குவிந்து அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காரணம் கடந்த 2011 ஆம் ஆண்டு ராக்ஸ்டார்ட் பட விளம்பரத்தின் போது, ரன்பீர் கபூர் நான் மாட்டிறைச்சிக்கு பெரிய ரசிகன் என்று கூறியதே.
இதனால், கோபமடைந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் கோயிலின் பிரதான வாயில் மற்றும் வி.வி.ஐ.பி.க்களுக்கான நுழைவு வாயிலில் கருப்புக் கொடியை கையில் வைத்துக் கொண்டு ஒன்றாக கூடினர்.
அப்பகுதியில் திடீரென பதற்றம் நிலவியதால், கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து பஜ்ரங் தளம் அமைப்பினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போராட்டம் ஒருபுறம் நடந்தாலும் அவர்கள் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…