Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 72,794.93
-192.10sensex(-0.26%)
நிஃப்டி22,127.95
-72.60sensex(-0.33%)
USD
81.57
Exclusive

ரஜினி மாதிரி இல்ல; விஜய் வேற ரகம் - சவுக்கு சங்கர் | Savukku Rajinikanth Vijay

Abhinesh A.R Updated:
ரஜினி மாதிரி இல்ல; விஜய் வேற ரகம் - சவுக்கு சங்கர் | Savukku Rajinikanth VijayRepresentative Image.

அதிக மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவர்களை கெளரவிக்கும் விதமாக விஜய் ரசிகர் மன்றம் நடத்திய பரிசு, சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து விழா முடியும் வரை மேடையில் இருந்து அனைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை கிளப்பியது மட்டுமில்லாமல், அரசியல் வட்டாரத்திலும் சிறுது அதிர்வலைகளைக் கிளப்பிச் சென்றது.

அந்தவகையில், நடிகர் விஜய் நடத்திய பரிசு வழங்கும் விழா பெரும் விவாதப் பொருள் ஆனது. இதுகுறித்து பலரும் தங்களின் கருத்துகளை முன்வைத்திருந்த நிலையில், தற்போது இணையத்தில் வைரலாக இருக்கும் சவுக்கு சங்கரும் தனது கருத்துகளை யூடியூப் சேனல் வாயிலாக கூறியிருக்கிறார். அதில் அவர் நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்துள்ளார். இது இணையத்தில் தற்போது டிரெண்டிங் ஆக பேசப்பட்டு வருகிறது.

ரஜினி மாதிரி இல்ல; விஜய் வேற ரகம் - சவுக்கு சங்கர் | Savukku Rajinikanth VijayRepresentative Image

ஒரு பைசா செலவு செய்யாத ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் பல ஆண்டுகளாக தவம் கிடந்தும், அவர் அரசியல் பிரவேசம் நடத்தவில்லை. எப்போது வருவேன் என்று சொல்லாமல் பல நிகழ்வுகளை நடத்திவிட்டு, அரசியலுக்கு வரப்போவதில்லை என முடிவாக ரஜினி கூறியது பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. ஆனால், நடிகர் விஜய்யின் நகர்வு அரசியலுக்கானது என பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசியிருக்கும் சவுக்கு இணையதளத்தின் ஆசிரியரான சங்கர், “ரஜினி இதுவரை அவரது ரசிகர்களுக்கு ஒரு வாய் நல்ல சோறு போட்டது கிடையாது” என்று பகிரங்கமாக விமர்சித்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே அவர் ஒரு பைசா கூட செலவு செய்ததில்லை, பின்னர் எப்படி மக்கள் பணிக்கு வந்து செலவிடுவார்,” என்றார்.

ரஜினி மாதிரி இல்ல; விஜய் வேற ரகம் - சவுக்கு சங்கர் | Savukku Rajinikanth VijayRepresentative Image

விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்

தொடர்ந்து பேசிய சவுக்கு சங்கர், “ஆனால் நடிகர் விஜய் அப்படியில்லை. அவர் சொந்த காசை செலவு செய்து, மாணவர்களுக்கு பரிசுகளை அளித்து ஊக்கப்படுத்தி உள்ளார். இது அவர் அரசியலுக்கு வருவதற்கான முதற்கட்ட பணி என்றே நினைக்கிறேன். வெளிப்படையாகவே அது தெரிகிறது,” என்றார்.

மீனவர்களுக்கு ஆதரவாக அவர்களை போராட்ட களங்களில் சென்று சந்தித்தது முதல் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளையும், ஏழை மாணர்களுக்கு நிதி உதவிகளையும் அழித்து வரும் விஜய்யின் ஒவ்வொரு நகர்விலும் அரசியல் பார்வை இருப்பதாக சவுக்கு சங்கர் கணித்துள்ளார்.

ரஜினியை தாக்கியும், விஜய் குறித்து நல்ல விதத்திலும் சங்கர் சொன்ன கருத்துகள் இப்போது இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளது. இரு நடிகர்களின் ரசிகர்களும் மாறி மாறி சமூக வலைத்தள பதிவுகளுக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர். எப்போதும் போல இந்த நேர்காணலிலும் நெருப்பைப் பற்ற வைத்துள்ளார் சவுக்கு என்பதே மாறாத உண்மை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்