Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகன், மகள், பேரன் கொள்ளுபேரன்களுடன் 101-வது பிறந்த நாளை கொண்டாடிய பாட்டி

Bala July 08, 2022 & 17:36 [IST]
மகன், மகள், பேரன் கொள்ளுபேரன்களுடன் 101-வது பிறந்த நாளை கொண்டாடிய பாட்டி Representative Image.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அலமேலு என்ற பாட்டி தனது 101 வது பிறந்த நாளை மகன், மகள், பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக கொண்டாடினார். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த கோனாபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் அலமேலு, 101 வயதான இவருக்கு 4 மகன்களும், 1 மகளும், 9 பேரன்களும், 7 கொள்ளு பேரன்களும் உள்ளனர். இந்நிலையில் அலமேலு தனது 101 வயது பிறந்த நாளை மகன், மகள், பேரக்குழந்தைகளுடன் கொண்டாடினார். இதற்காக அவரது மகன் மேடை அமைத்து நாதஸ்வரம் இசைத்து பல்வேறு இடங்களில் பூஜை செய்தார். இதனைதொடர்ந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் மூதாட்டி அலமேலுவிடம் வந்து ஆசி பெற்று செற்றனர். அங்கு வந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய அலமேலு வின் மகன், தனது அம்மா இன்று வரை அவரது வேலை அவரே செய்து கொள்வதாகவும், 100 வயதை தாண்டியும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதற்கு அவருடைய உணவு பழக்கமே காரணம் என தெரிவித்தார். மேலும் அலுமேலு அவித்த உணவுகளையே பெரும்பாலும் விரும்பி சாப்பிடுவார் என தெரிவித்தார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்