கேரளாவில் மேலும் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி கடந்த 10 நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பெரும்பாலான ஆருகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக கண்ணூர், காசர்கோடு, மடப்புரம், கோழிக்கோடு உள்பட வட மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது.இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால், திருவனந்தபுரம், கொல்லம் தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…