Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை விடுமுறை..!

Bala [IST]
அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை விடுமுறை..!Representative Image.

வெள்ளப்பெருக்கு காரணமாக அசாம் மநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அசாம் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இடைநிலைக் கல்வித் துறை, அசாம் அரசின் அனைத்து தொடக்க, மேல்நிலை, மூத்த மேல்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கோடை விடுமுறையை ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்