ஆழியார் குரங்கு அருவியில் ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்சி மலைகளுக்கு அருகே அமைந்துள்ளது ஆழியர் அணை. இங்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், விடுமுறை தினமான இன்று ஏராளமான பயணிகள் குவிந்தனர். ஆனால் ஆழியார் அணையில் ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குரங்கு அருவியில் , பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும் மழை காரணமாக பயணிகள் விடுதிக்குள்ளே முடங்கியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…