கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜுலை 7) விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னையில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் ஒரு சில இடங்களின் பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், கோடம்பாக்கம், புரசைவாக்கம், மயிலாப்பூர், கிண்டி, தியாயராய நகரிலும், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பூந்தமல்லி மேடவாக்கம் என புறநகர் பகுதிகளும் மழை கொட்டி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. வால்பாறையில் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜுலை 7) விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…