சீனாவில் கனமழை காரணமாக ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டதுடன், சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சீனாவில் பெய்து வரும் மழையால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…