விருதுநகர், மதுரை, தென்காசி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும், 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கும், 5 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அவசர எண்களை அறிவித்துள்ளார்.
மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் - 1077; மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் - 1070 என்ற Toll Free எண்கள் மூலமாகவும்; 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் பாதிப்புகளை தெரியப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…