நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அம்மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
அசானி புயல், காரணமாகவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் கடந்த சில பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வாங்கியது. கோடையில் பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் தண்னீர் தட்டுப்பாடு பிரச்சனை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல் அருவிக்கு நீர் வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கவோ, பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…